பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை மையங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
x
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்றுள்ள அவர், பெருந்துறையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு 400 படுக்கை வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையம் மற்றும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்