"தவிக்கும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள்" - தமிழக அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் - மநீம தலைவர் கமல்ஹாசன்

கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
தவிக்கும் தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் - தமிழக அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் - மநீம தலைவர் கமல்ஹாசன்
x
கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு உதவ வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானா அரசு செய்தது போல, தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் உரிமைகளை நிலைநாட்ட, நலவாரியம் அமைக்கப்பட வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கைக்கு, அரசு உடனே செயலாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்