தினசரி கொரோனா பாதிப்பு குறையும் நிலையில், ஒரே நாளில் 4,157 பேர் உயிரிழப்பு

தினசரி தொற்று பாதிப்பு குறையும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர்.
x
தினசரி தொற்று பாதிப்பு குறையும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, 
கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 8 ஆயிரத்து 921 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 71 லட்சத்து 57 ஆயிரத்து 874 ஆக  உயர்ந்துள்ளது.
4 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்து 11 ஆயிரத்து 388 ஆக அதிகரித்துள்ளதுகடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 95 ஆயிரத்து 955 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நிலையில், 24 லட்சத்து 95ஆயிரத்து 591 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இதுவரை 20 புள்ளி 6 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்