கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் மழை - தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ராஜாக்கமங்கலம் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைவெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன.
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ராஜாக்கமங்கலம் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடுகள் மழைவெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன. இரண்டாவது நாளாக பெய்யும் தொடர் மழையால் ராஜாக்கமங்கலம் அருகே மேல சங்கரன்குழி பகுதியில் உள்ள பன்றி வாய்க்காலில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாய்க்காலில் இருந்து குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இதனால் வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். மேலும்,  ஆசாரிபள்ளம் - குளச்சல் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்