பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி
x
பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் - 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண் அதிகாரி  

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் புதிய முதன்மை செயலாளராக  பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி காகர்லா உஷா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலாளராக ஐ .ஏ.எஸ் . அதிகாரி சபிதா பல வருடங்கள் பதவியில் இருந்தார். அவருக்கு பின் உதயசந்திரன், பிரதீப் யாதவ்,  தீரஜ்குமார் ஆகியோர் பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளராக பதவி வகித்தனர். இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளி கல்வித்துறைக்கு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான காகர்லா உஷா புதிய முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். மூத்த ஐஏஎஸ் அதிகாரியான காகர்லா உஷா  தமிழகத்தில் கரூர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது  

Next Story

மேலும் செய்திகள்