மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விவகாரம் - "சட்டமன்றம் கூடிய பிறகு முடிவு" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சட்டமன்றம் கூடிய பிறகே நீட்தேர்வு விவகாரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு விவகாரம் - "சட்டமன்றம் கூடிய பிறகு முடிவு" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சட்டமன்றம் கூடிய பிறகே நீட்தேர்வு விவகாரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், நீட் பயிற்சி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், சட்டமன்றம் கூடிய பிறகே, நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தும் விவகாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். இதன் காரணமாக, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீட் பயிற்சி கேள்விக்குறியாகி இருப்பதாக, கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவு செய்து, போதிய பயிற்சி பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
