மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது
x
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில், கைது செய்யப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர் ராஜகோபலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த‌தாக, அப்பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சென்னை வடபழனி காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது. இதனிடையே, முன்னாள் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜகோபாலன் மீது, 5 பிரிவுகளில் அசோக் நகர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, போக்சோ எனப்படும், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜகோபாலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக, தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67 மற்றும் 67-A ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதியப்பட்டுள்ளது. அதே போன்று, பெண்களின் மானத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாக இந்திய தண்டனை சட்டம் 354-A மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


Next Story

மேலும் செய்திகள்