ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக் கொலை... ரூ.5 லட்சம் பணம் கேட்டு ரவுடிகள் மிரட்டல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பணம் கொடுக்காததால் ரியல் எஸ்டேட் அதிபரை, ரவுடிகள் சுட்டுக் கொன்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக் கொலை... ரூ.5 லட்சம் பணம் கேட்டு ரவுடிகள் மிரட்டல் 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, பணம் கொடுக்காததால் ரியல் எஸ்டேட் அதிபரை, ரவுடிகள் சுட்டுக் கொன்றிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தளி பகுதிக்கு உட்பட்ட பெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், நேற்று இரவு 3 பேர் கொண்ட ரவுடிக் கும்பல் இவரது வீட்டிற்குள் புகுந்து உள்ளது. அந்த கும்பல், லோகேஷிடம் 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. லோகேஷ் பணம் தர மறுத்ததால், அந்த கும்பல் நாட்டுத் துப்பாக்கியால் லோகேஷை சுட்டு உள்ளது. இதில் தலையில் குண்டுபட்டு லோகேஷ் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஒசூர் பகுதிகளில் வலம் வரும் பிரபல ரவுடி கஜா மற்றும் அவரது நண்பர் எதுபூசன் ரெட்டி உள்ளிட்ட சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்