பக்திப் பரவசத்தில் சுட்டிப்பையன்... முருகனே அமர்ந்திருப்பதைப் போல் தோரணை !

சுட்டிப் பையன் ஒருவன் பக்திப் பாடலை ரசிக்கும் காட்சிகள்தான் இணையத்தில் இப்போது வைரல்
பக்திப் பரவசத்தில் சுட்டிப்பையன்... முருகனே அமர்ந்திருப்பதைப் போல் தோரணை !
x
பக்திப் பரவசத்தில் சுட்டிப்பையன்... முருகனே அமர்ந்திருப்பதைப் போல் தோரணை ! 


"ஒடி விளையாடு பாப்பா" என்று பாடினார் பாரதி. ஆனால் இந்தக் கொரோனா பெருந்தொற்று, பால்மனம் மாறா பச்சைக் குழந்தைகளை ஓடியாடி விளையாடக் கூட முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடக்கி விட்டது. வீட்டில் அடைபட்டுக் கிடக்கும் குழந்தைகளுக்கு ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி மட்டும்தான் என்றிருக்கும் நிலையில், சுட்டிப் பையன் ஒருவன் பக்திப் பாடலை ரசிக்கும் காட்சிகள்தான் இணையத்தில் இப்போது வைரல்!... கால் மேல் கால் போட்டுக் கொண்டு, முருகன் பாடலைக் கசிந்துருகி சிலாகித்துக் கேட்கும் அந்தச் சிறுவனைப் பார்க்கையில், முருகனே அமர்ந்து தன்னைப் பற்றிய பாடலை ரசித்து கேட்பது போல் தோரணையில் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

Next Story

மேலும் செய்திகள்