ரெம்டெசிவிர் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ரெம்டெசிவிர் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
x
தமிழகத்திற்கு நாளொன்றுக்கு 7 ஆயிரம் ரெம்டெசிவிர் குப்பிகள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், அதை அதிகரிக்க கோரி மத்திய அமைச்சர் பியுஷ் கோயலிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசி வாயிலாக உரையாடினார். அப்போது, தமிழ்நாட்டின் தேவைக்கு இது போதுமானதாக இல்லை என, ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் தற்போது அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளிலும், 6 பெருநகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கும் இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நிலையில், இவர்களில் நுரையீரல் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுகிறது. இந்நிலையில், நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவிர் மருந்தை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே தேவையை பூர்த்தி செய்ய முடியுமென மத்திய அமைச்சரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். மேலும், முதல்வரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து ஆவன செய்வதாக மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் உறுதி அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்