தமிழகத்தில் ஒரே நாளில் 21,228 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து மூன்றாவது நாளாக இருபதாயிரத்தை தாண்டி உள்ளது.
x
தமிழகத்தில் கடந்த 12 நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. தற்போது புதிதாக ஒரே நாளில் 21 ஆயிரத்து 228 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 12 லட்சத்து, 49 ஆயிரத்து  292 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 144 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்து 612  ஆக உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 19 ஆயிரத்து 112 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 வயது வரை உள்ள சிறார்களில் புதிதாக 790 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்