தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு... தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 6 மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பாதிப்பு அதிகமுள்ள  காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களோடு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலி காட்சி மூலம் ஆலோசனையை மேற்கொள்கிறார். அப்போது மே மாதத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, டிஜிபி திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் கலந்துகொள்கின்றனர் 

 

Next Story

மேலும் செய்திகள்