வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்
x
என்னை உள்ளே வைத்து பூட்டி செல்கிறார்.. நாற்காலியை தூக்கி வீசினார் - வட்டாட்சியருக்கு எழுதிய புகார் கடிதம் 

கடலூரில் வி ஏ ஓ மீது புகார் தெரிவித்து வட்டாட்சியருக்கு கடிதம் அளித்துவிட்டு பெண் உதவியாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தை தேர்ந்த மாரியம்மாள் பாதிரிக்குப்பம் ஊராட்சியில் கிராம உதவியாளராக இருந்து வருகிறார். நேற்று திடீரென்று அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி மீது குற்றம் சாட்டி தாசில்தாருக்கு அவர் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அதில் கூறியுள்ளது படி, வி.ஏ.ஓ லட்சுமி தேவி தான் வேலை செய்து கொண்டிருக்கும் போதே அலுவலகத்தை பூட்டி சென்றதால் வருவாய் ஆய்வாளரிடம் புகார் அளித்திருக்கிறார் மாரியம்மாள். இதையடுத்து மீண்டும் அலுவலகத்துக்குச் சென்ற மாரியம்மாளை விஏஓ லட்சுமிதேவி ஆபாசமாக திட்டியதாகவும் நாற்காலியை தூக்கி வீசி அவமானப்படுத்தியதாக வும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாசில்தார் பலராமனிடம் கேட்டபோது புகார் மனு குறித்து விசாரணை நடத்த ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Next Story

மேலும் செய்திகள்