இலங்கையில் இருந்து கோக்கைன் கடத்தல்... தூத்துக்குடி துறைமுகத்தில் 300 கிலோ பறிமுதல்
இலங்கையில் இருந்து கோக்கைன் கடத்தல்... தூத்துக்குடி துறைமுகத்தில் 300 கிலோ பறிமுதல்
இலங்கையில் இருந்து கோக்கைன் கடத்தல்... தூத்துக்குடி துறைமுகத்தில் 300 கிலோ பறிமுதல்
இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட 1500 கோடி ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.இலங்கையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு மரத்தடிகளை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் போதை பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் போதை பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, துத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த கப்பலை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னரில் மரத்தடிகள் நடுவில் 9 பேக்குகளில் 300 கிலோ கோக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு 1500 கோடி ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கடத்தல் தொடர்பாக, கப்பலில் வந்த சிலரை சிலரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story