தமிழகத்தில் மேலும் 5,441 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 9,20,827 ஆக உயர்வு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 5,441 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 9,20,827 ஆக உயர்வு
x
தமிழகத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 579 பேர் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி 8 லட்சத்து 96 ஆயிரத்து 226 ஆக இருந்த கொரோனா மொத்த பாதிப்பு, தற்போது 9 லட்சத்து 20 ஆயிரத்து 827 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு 33 ஆயிரத்து 659 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நாளில் ஆயிரத்து 890 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் 15 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்