சிலிண்டரின் புதிய விலை உயர்வு இன்று முதல் அமல் - வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் கேஸ் விலையில் மாற்றம்

பெட்ரோல், டீசலை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சிலிண்டரின் புதிய விலை உயர்வு இன்று முதல் அமல் - வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் கேஸ் விலையில் மாற்றம்
x
பெட்ரோல், டீசலை தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்யணம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் 2-வது முறையாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்றைய தினம் 14.5 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்து  சென்னையில் 785 ரூபாய்க்கும், டெல்லியில் 769 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு மீது விதிக்கப்படும் வரிகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திற்கும் கேஸ் விலையில் வேறுபாடு காணப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்