மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மன உளைச்சலில் ரயில் முன் பாய்ந்து விவசாயி தற்கொலை
x
தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் சேதமடைந்ததால் விரக்தியில் விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த மோகனாம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபு என்பவர், 10 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்துள்ளார். அண்மையில் பெய்த தொடர் மழையால் பயிர்கள் சேதமடைந்ததால், அவருக்கு கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ரமேஷ்பாபு, ஆவராணி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டும் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்