மழை நீரை அப்புறப்படுத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்

சென்னையில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்த முயன்ற தொழிலாளிகள் 2 பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மழை நீரை அப்புறப்படுத்த முயன்ற போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்
x
சென்னையில் பெய்த கனமழை காரணமாக  புளியந்தோப்பு  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இந்த பகுதியில் உள்ள குடோனில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் 68 வயதான மோகன் மற்றும 48 வயதான ஆறுமுகம் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மழை நீரை அகற்ற மோட்டாரை அவர்கள் இயக்கிய போது திடீரென மின்சாரம் இருவர் மீதும் பாய்ந்தது. இதில் 2 பேருமே சம்பவ இடத்தில் பலியாகினர். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்