புரெவி புயல் பாதிப்பு - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நிவர் மற்றும் புரெவி புயல் பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
புரெவி புயல் பாதிப்பு - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
x
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் இருந்து மக்களை மீட்பது, அத்தியாவசிய பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் புரெவி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்