"கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இல்லை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

பிற மாநிலங்களை போல் தமிழகத்தில், பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
பிற மாநிலங்களை போல் தமிழகத்தில், பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில், அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு, இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக, மற்ற மாநிலங்களை போல், பண்டிகை காலங்களில் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்