மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர்கள் கூட்டம் : கூட்டணி குறித்து கவலையில்லை - கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலர்கள் கூட்டம் : கூட்டணி குறித்து கவலையில்லை - கமல்ஹாசன்
x
சென்னை பாண்டிபஜாரில் உள்ள தனியார் ஹோட்டலில், தொடங்கிய இந்த கூட்டம், இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இன்றைய தினம் 3 அமர்வுகளாக சுமார் 100 க்கும் மேற்பட்ட  நிர்வாகிகளை சந்திக்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது, பிரசார யுக்திகள்,  வரக்கூடிய நாட்களில் எந்தெந்த பணிகளை முன்னெடுப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பேசிய கமலஹாசன், கூட்டணி குறித்து கவலையில்லை என்றும், வரும் சட்டமன்ற தேர்தலில் நாமே 
வெல்வோம் என்றும், மக்களை நம்புவோம்... தேர்தலை சந்திப்போம் என்றும் பேசி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்