மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்கும் விவகாரம் : முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் - அமைச்சர் பாஸ்கரன்

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 219 வது குருபூஜை விழாவானது இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மருதுபாண்டியர்களுக்கு சிலை வைக்கும் விவகாரம் : முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் - அமைச்சர் பாஸ்கரன்
x
மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 219 வது குருபூஜை விழாவானது இன்று சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொது மக்கள் அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கதர்துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாஸ்கரன்,  சிவகங்கையில் மருதுபாண்டியர்களின் சிலை வைப்பது குறித்து, முதல்வர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்