மோர்தானா அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்

தமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதி அருகே இருக்கும் கௌவுண்டன்யாமகாநதி ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது
மோர்தானா அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றம்
x
தமிழக-ஆந்திர எல்லையோரம் உள்ள வனப்பகுதி அருகே இருக்கும் கௌவுண்டன்யாமகாநதி ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அணைக்கு 1000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் வரும் நீரானது முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருவதால் கௌவுண்டன்யா மகாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்போடு இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பணித்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்