தமிழகத்தில் மேலும் 3,086 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,97,116 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 780 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 301 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  

சென்னையில் மேலும் 845 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் 845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 527 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 183 பேர் குணமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்