அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்கவேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவே முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
7.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாவிட்டால் அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரவே முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிக்கத் தொடங்கிவிட்டாலும், நடப்பாண்டின் களச்சூழலில் அவர்கள் எடுத்த கட்-ஆஃப் மதிப்பெண் போதுமானதாக இல்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Next Story