மீண்டும் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 61 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 10 ஆயிரத்து 314 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 165 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 43 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா

சென்னையில் மேலும் ஆயிரத்து 212 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 13 பேர் உயிரிழந்தால் உயிரிழப்பு எண்ணிக்கையும், 3 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையை தவிர பிற மாவட்டங்களில், 3 ஆயிரத்து 667 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்