தமிழகத்தில் மேலும் 5,584 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று 80 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் , 5 ஆயிரத்து 584 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
x
தமிழகத்தில் இன்று 80 ஆயிரத்து 401 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் , 5 ஆயிரத்து 584 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 80 ஆயிரத்து 524 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 6 ஆயிரத்து 516 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. இன்று 78 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது . மருத்துவமனைகளில் 49 ஆயிரத்து 203 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 993 பேருக்கு கொரோனா 

சென்னையில் மேலும் 993 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 591 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் இன்று ஆயிரத்து 154 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 14 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. 10 ஆயிரத்து 854 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்