முழு கொள்ளளவை எட்டிய வரமாநதி அணை - நிரம்பி வழியும் அணையை காண குவியும் மக்கள்
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது.
பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக வரதமாநதி அணை நிரம்பி வழிகிறது. அணையின் முழு கொள்ளளவான 66 அடியை எட்டியதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை காண பொதுமக்கள் அதிகளவில் குவிந்து வருகின்றனர். குடும்பத்தோடு வரும் மக்கள், தங்கள் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
Next Story