தமிழகத்தில் 2.50 லட்சம் பேர் குணமடைந்தனர் - புதிதாக 5,834 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 2.50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. இன்று புதிதாக 5 ஆயிரத்து 834 பேருக்கு தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 649 ஆக உயர்ந்து இருக்கிறது. மேலும் 6 ஆயிரத்து 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 118 பேர் உயிரிழந்து உள்ள மொத்தமாக 5 ஆயிரத்து 159 பேர் உயிரிழந்துள்ளனர். 52 ஆயிரத்து 810 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் மேலும் 986 பேருக்கு கொரோனா - பிற மாவட்டங்களில் 4,848 பேருக்கு தொற்று 

சென்னையில் மேலும் 986 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 848 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று 23 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கன்னியாகுமரியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 11 ஆயிரத்து 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்