வேல் பூஜை செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டிய பாஜகவினர் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல்

வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுமக்கள் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்யக்கோரி ஈரோட்டில் பாஜகவினர் சுவரொட்டிகளை நேற்று இரவு ஒட்டினர்.
வேல் பூஜை செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டிய பாஜகவினர் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியல்
x
வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதி பொதுமக்கள் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்யக்கோரி, ஈரோட்டில் பாஜகவினர் சுவரொட்டிகளை நேற்று இரவு ஒட்டினர். அப்போது அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் சாலையில் ஊர்வலமாக சென்று,  மறியலில் ஈடுபட்டனர்.  அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்