தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து13 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 5 ஆயிரத்து 471 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், ஒரே நாளில் 85 உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் மேலும் 1,155 பேருக்கு தொற்று - பிற மாவட்டங்களில் 5,831 பேர் பாதிப்பு 

சென்னையில் மேலும் ஆயிரத்து 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 94 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக ஆயிரத்து 315 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் ஒரேநாளில்16 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் 2 ஆயிரத்து11 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மாவட்டங்களில் கொரோனா வேகமெடுத்துள்ளது. சென்னையை தவிர்த்த பிற மாவட்டங்களில் மட்டும் ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 831 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்