காவலருக்கு கொரோனா தொற்று உறுதி - வள்ளியூர் காவல் நிலையம் மூடல்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
x
நெல்லை மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பேருராட்சி சார்பில் காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், காவல் நிலையம் மூன்று நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்