உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் இழப்பீடு" முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
x
நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெய்வேலி என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் 6 பேர் உயிரிழந்த செய்திக்கேட்டு மனவேதனையடைந்ததாக கூறியுள்ளார். இந்த விபத்தில் காயம் அடைந்த 17 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.  விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், 6 பேரின் குடும்பங்களுக்கு தலா  3 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்