கட்டிய மனைவியை நண்பனுக்கு விருந்தாக்கிய கணவர் - மதுவுக்கு அடிமையானதால் விபரீதம்
கட்டிய மனைவியை, கணவனே, நண்பனுக்கு விருந்தாக்கிய சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.
இந்த கொடூரத்தில் ஈடுபட்ட கணவனையும், அவரது நண்பனையும் போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர் அன்பில் ததர்மலிங்கம் நகரை சேர்ந்த பர்வீன் என்பவர்,கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில் தனது கணவரின் நண்பர் முகமது ஃபாருக் என்பவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக வைத்துக்கொண்டு மிரட்டுவதாக கூறியுள்ளார். அதோடு பணம் மற்றும் 25 சவரன் நகையைும் அவர் பறித்துக்கொண்டு விட்டதாக புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பர்வீன் கணவர் அஸ்லாம், அவரது நண்பர் பாரூக்கை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
Next Story