34 வயது இளைஞர் கொரோனாவிற்கு உயிரிழப்பு - விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தூத்துக்குடியில் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 34 வயதான இளைஞர் ஒருவர், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 34 வயதான இளைஞர் ஒருவர், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற அந்த இளைஞருக்கு, கடந்த 8ஆம் தேதி தொற்று உறுதியானது. இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடக்கம் செய்தனர்.
Next Story