திருச்சி: சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கருமலை பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் மணப்பாறை - துவரங்குறிச்சி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
Next Story