தமிழகத்தில் மேலும் 1,685 பேருக்கு கொரோனா தொற்று - புதிதாக 21 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஒரே நாளில் 1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
x
தமிழகத்தில், ஒரே நாளில்1,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது. புதிதாக 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 307 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 798 பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்து 325 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும், 16ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் 1,243 பேருக்கு கொரோனா

சென்னையில் மொத்த பாதிப்பு 24,545 சென்னையில் ஒரே நாளில் 1,243  பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24 ஆயிரத்து 545 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 244 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றிலிருந்து, 11 ஆயிரத்து 730 பேர் குணமடைந்துள்ள நிலையில், 12 ஆயிரத்து 570 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்