சிறுமி நரபலி - பெண் மந்திரவாதி சிறையில் அடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், நொடியூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்
புதுக்கோட்டை மாவட்டம், நொடியூர் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 5 வாரங்களாக போலீசார் விசாரணையில் இருந்த வசந்தியிடம் இருந்து, கார், செல்ஃபோன் மற்றும் மாந்திரீக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் வசந்தியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தேவைப்படின் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
Next Story