முதலமைச்சர் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு" காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு

சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ஒளிரும் தமிழ்நாடு காணொலி மாநாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. மாநாட்டில், தொழில் வளம் பற்றிய கையேட்டினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திடவும்,  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது. மாநாட்டில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பை, தமிழ்நாட்டில் துவங்க பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும்
சூழ்நிலையை பொறுத்து அரசு தளர்வுகளை அறிவிக்கும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

தொழிற் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் - முதல்வர்

தொடர்ந்து மாநாட்டில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா கால கட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தொழிற் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்