கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை - 5 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் கழிவுநீர் தொட்டியில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தின் கழிவுநீர் தொட்டியில் காட்டெருமை ஒன்று தவறி விழுந்தது. அதனை கண்ட அக்கம்பக்கத்தினர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சுமார் 5 மணி நேரம் போராடி காட்டெருமையை உயிருடன் மீட்டனர்.
Next Story