மே 31 வரை நீட்டிக்கப்படுகிறதா ஊரடங்கு? - முதலமைச்சர் சூசக தகவல்
பிரதமர் உடனான ஆலோசனையில், முதலமைச்சர் பழனிசாமியின் வேண்டுகோள், ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற கருத்தை தெரியப்படுத்துவதாக உள்ளது.
இம்மாத இறுதி வரை ரயில் மற்றும் விமான சேவைகளை தொடங்க வேண்டாம் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இம்மாத இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பதை மனதில் வைத்தே, டாஸ்மாக் வழக்கில் அவசரமாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
Next Story