தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
தனியார் பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதம்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் - ராஜபாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் வன்னியம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பஞ்சு ஆலையில் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த அறையில்  திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு , ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையத்தில் இருந்து 2 வாகனத்தில் வந்த  20 தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story

மேலும் செய்திகள்