"அரசு அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே செல்ல முடியும்" - செங்கல்பட்டு எல்லையை கடந்து செல்ல கட்டுப்பாடு

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
x
இருசக்கர வாகனம், கார் மூலம் படையெடுத்தவர்களால் இன்று காலை செங்கல்பட்டு பகுதியில் நெரிசல் ஏற்பட்டது . இதனால், மாவட்ட எல்லைகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், 
அரசு அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே  சென்னையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னையிலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்தைக் கடக்கும் வாகனங்களை  பரிசோதிக்க 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்