"டெல்லி சென்றவர்கள் தாமாக தகவல் தெரிவிக்கவும்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள், தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி சென்றவர்கள் தாமாக தகவல் தெரிவிக்கவும் - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
x
டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள், தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த ஆட்சியர், முதல்வர் அறிவித்த நிவாரண தொகை நாளை முதல் நியாயவிலை கடைகளில் நாளொன்றுக்கு 70 பேருக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்