சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள க.விலக்கு காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவர், தேவையின்றி சாலையில் வாகனங்களில் வரும் மக்களை நிறுத்தி, அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுக்கிறார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த சினிமா பாட்டையும் பாடி அசத்தி வருகிறார்.
Next Story