கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று 3 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் வேலை பார்த்து, திரும்பி வந்த 66 வயதான மீனவருக்கு காய்ச்சல் இருந்ததால், தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். இவருடைய மகன் கடந்த 13ஆம் தேதி, செளதி அரேபியாவில் இருந்து ஊர் திரும்பி இருந்த நிலையில், அவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில், அதே வார்டில் இருந்த 2 வயது குழந்தை மற்றும் 24 வயது இளைஞரும் இன்று உயிரிழந்தனர். 3 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகளும் இன்னும் வெளிவராத நிலையில், உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குமரி மருத்துவமனையின், கொரோனா வார்டில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஏற்கனவே இங்கு உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story