"சிஏஏ மூலம் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள்" - சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி தலைவர்

சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
x
சென்னை சேத்துப்பட்டில் முருகன் என்பவர் எழுதிய "நுனிமை" கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நூலை வெளியிட, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய சரத்குமார், சி.பா.ஆதித்தனார் எளிய முறையில் தமிழை எழுதியதால், தினத்தந்தி நாளிதழை படித்து நிறைய பேர் தமிழ் கற்றுக் கொண்டார்கள் என தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் நாடு கடத்தப்பட்டால், களத்தில் இறங்கி போராடுவேன் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்