"ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் விடுக்க கோரிக்கை"- உயர்நீதிமன்றத்தில் நளினி புதிய மனு
உயர்நீதிமன்றத்தில் நளினி புதிய மனு
ஆளுநரின் ஒப்புதலின்றி தன்னை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சரவை பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்காத ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கவும் மனுவில் அவர் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story