குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம்: "அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி"

குருப்-1 தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி அளித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வு முறைகேடு விவகாரம்: அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி
x
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க கோரி, தி.மு.க சார்பில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆஜரான தி.மு.க வழக்கறிஞர், முறைகேட்டில் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும், விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்றும் வாதம் செய்தார். எதிர்வாதம் செய்த டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய வழக்கறிஞர், முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதியை பெற்றுள்ளதாகவும், விரைவில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து, ஏப்ரல் ஆறாம் தேதிக்குள்,  தமிழக அரசும் சிபிஐ-யும் பதிலளிக்க உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்