தண்ணீர் தேடி குடியிருப்புக்குள் புகுந்த கரடிகள் : கரடிகளை விரட்ட பொதுமக்கள் வலியுறுத்தல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக புகும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே, குடியிருப்பு பகுதிக்குள் கூட்டம் கூட்டமாக புகும் கரடிகளால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கேத்தரீன் நீர்வீழ்ச்சி செல்லும் சாலையின் அருகே, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் தேடி 3 கரடிகள் புகுந்தன. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இதையடுத்து கரடிகளை விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story